காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: சிறப்பு காவல் அதிகாரி உட்பட 2 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் சிறப்பு காவல் அதிகாரி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் பகுதியில், சிறப்பு காவல் அதிகாரிகள் மீது தீவிரவாதிகள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த காவல் அதிகாரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொதுமக்கள் ஒருவரும் உயிரிழந்தார். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version