பாக். ராணுவம் அத்துமீறித் தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்களில் ஒருவரும் மரணமடைந்தார். காஷ்மீரின் தங்தார் என்னுமிடத்தில் ஊடுருவல்காரர்களை உள்ளே அனுப்பும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். அப்பாவி பொதுமக்களில் ஒருவர் மரணமடைந்தார். மேலும் மூவர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் குண்டு வீச்சில் வீடுகள், கார்கள் ஆகியவை சேதமடைந்தன. இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்ததில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version