சட்டப்பிரிவு 370 இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு

ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை 2 நாட்களாக ஆய்வு செய்த ஐரோப்பிய யூனியனை சேர்ந்த எம்.பிக்கள் குழு, ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம் எனத் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் எனவும், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது இந்திய அரசின் உள்நாட்டு விவகாரம் எனவும் தெரிவித்தனர்.

Exit mobile version