காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா தக்க பதிலடி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டுள்ளது.

புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து இந்திய- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் அவ்வப்போது எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், காஷ்மீரின் அக்னூர் மற்றும் சுந்தர்பனி பகுதியில் விடிய விடிய பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது.

துப்பாக்கிச் சூடு, குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

Exit mobile version