பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய பிறகு, ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியான கிருஷ்ணா கட்டி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச்சூடு ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இச்சம்பவத்தால் எல்லையில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

Exit mobile version