பிரதமர் மோடியை கொலை செய்ய பாக். தீவிரவாதிகள் சதிதிட்டம்?: உளவுத்துறை எச்சரிக்கை

பிரதமர் மோடியை கொலை செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்ற உள்ளார். இதில் டெல்லியில் உள்ள சட்டவிரோத குடியிருப்புப் பகுதிகளை ஒழுங்குப்படுத்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து, கூட்டத்தில் மோடி விளக்க இருக்கிறார். இந்த நிலையில், அவர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற தகவலை, எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும், டெல்லி காவல் துறையினருக்கும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

மோடியை குறி வைத்து தாக்குவதற்காக பயங்கரவாத அமைப்பான ஜெய் ஷே முகம்மது தீவிரவாதிகள் தயார் நிலையில் இருக்கின்றனர் என்பதை கண்டறிந்த உளவுத்துறை, ராம்லீலா மைதானத்தில் மோடிக்கு போதிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version