தஞ்சாவூரில் பல இடங்களில் திருடப்பட்ட 100 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 100 செல்போன்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தஞ்சை சரக டிஐஜி பங்கேற்று உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் பொதுமக்கள் செல்போன்களை கவனமாக பயன்படுத்த வேண்டும், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் செல்போன்களை உபயோகிக்க கூடாது என்றும் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 400 பேரின் செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version