முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு

முதலமைச்சர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதற்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் முறைகேடுகள் நடந்ததாகவும், இதுதொடர்பாக முதலமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், முதலமைச்சர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதற்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மனு, அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version