அடுத்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர் ராமநாதபுரம் வருகை!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கழக இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொள்கிறார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வருகை தரவுள்ள நிலையில், காவல்துறை சார்பில் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு, முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து இந்த மனுவை அவர் வழங்கியுள்ளார்.

Exit mobile version