தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று வதந்தி பரப்பியவர் பெங்களூருவில் கைது

தமிழகத்தில் ரயில்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று வதந்தி பரப்பியவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது அதில்,தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ரயில்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அந்த நபர் தெரிவித்ததையடுத்து தமிழகம், கர்நாடகத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு என வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநர் சுந்தர மூர்த்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version