டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஒருவர் கைது

கோவையில் டாஸ்மாக் கடையில் 10 லட்சம் ரூபாய் மற்றும் மதுபானங்களை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வடவள்ளி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

புகாரின் பேரில் கொள்ளையர்களை தேடி வந்த காவல்துறையினர், சீரனாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொள்ளையில் தொடர்புடைய மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version