ரஷ்யா மின் நிலையத்தில் பெரும் தீ விபத்து: ஒருவர் பலி

மாஸ்கோ நகரின் அருகேயுள்ள மின் நிலையத்தில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ நகரின் அருகில் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 50 அடி உயரம் வரை தீ எரிந்து வருவதால் விமானங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தில் ஒருவர் பலியானதாகவும்,12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version