மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

மும்பையில் சார்ணி ரோடு என்னுமிடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த அனைவரையும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

தெற்கு மும்பையில் சார்ணி ரோடு என்னுமிடத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை திடீரெனத் தீப்பிடித்தது. இது குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீப்பிடித்த வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த எட்டுப் பேரைத் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.

Exit mobile version