தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்: அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நன்றி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் எரிந்த வீட்டிற்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த மேல்காரணை கிராமத்தில் கொடிஅம்மாள் என்பவருக்கு சொந்தமான வீடு இரவு நேரத்தில் தீப்பற்றி எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் மேலதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனிடையே, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மேல்காரணை ஊராட்சியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கிணறுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் மூதாட்டியின் வீடு எரிந்த தகவல் அறிந்த அமைச்சர் உடனடியாக நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உத்தரவை அடுத்து அதிகாரிகள் உடனடியாக மூதாட்டிக்கு நிவாரண தொகை வழங்கினர். நிவாரணம் வழங்க உத்தரவிட்ட சட்டத்துறை அமைச்சருக்கு பாதிக்கப்பட்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version