காஷ்மீரில் தீவிரவாதி தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் எஸ்.பி.ஐ வங்கியின் அருகே தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்தார். அங்கிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. பாதுகாப்புப் படையினர் வாகனத்தில் கடந்து சென்ற சில நிமிடங்களில், நடத்தப்பட்ட இத்தாக்குதலால் மீண்டும் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதனிடையே காஷ்மீரின் செளக் பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் மீண்டும் பரப்பான நிலையை எட்டியுள்ளது.

Exit mobile version