காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 தொழிலாளர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் காஷ்மீரைச் சேராத 5 தொழிலாளர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரு தொழிலாளிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version