கருணாநிதியின் அனுமதியுடனே காவிரியில் கர்நாடகா அணை கட்டியது: ஓ.பன்னீர்செல்வம்

திமுக தலைவர் கருணாநிதியின் அனுமதியின் பேரிலேயே காவிரியின் குறுக்கே கர்நாடகா நான்கு அணைகளை கட்டியதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கேபி முனுசாமி மற்றும் ஒசூர் சட்டமன்ற வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த அவர் காவிரிப் பிரச்சனையில் நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதற்கும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கும் அதிமுக அரசே காரணம் என்பதை சுட்டிக் காட்டினார்.

மேலும் வன்முறை தான் திமுகவின் கலாச்சாரம் என்று குறிப்பிட்ட துணை முதலமைச்சர், ஸ்டாலினின் நாடகங்கள் மக்களிடம் பலிக்காது என்று தெரிவித்தார். மேலும் கூட்டணிக் கட்சியினரே ஸ்டாலின் முதல்வராவதை விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Exit mobile version