அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் -பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சிறப்புரை!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டமானது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் உரையாற்றினார். அவர் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசினை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் பொதுமக்கள் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். துரோகிகளையும் எதிரிகளையும் வென்று எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவியின் வழியில் வீறு நடை போட்டுக் கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டார் என்.ஆர். தனபாலன். இந்த இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறுவது உறுதி என்று குறிப்பிட்டார். அவரின் விரிவான உரையைக் காண கீழே உள்ள கணொளியினைச் சொடுக்கவும்.

Exit mobile version