கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை -முதலமைச்சர்

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வரவேற்பதாக கூறினார்.

Exit mobile version