சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும்: மத்திய அமைச்சர் வேண்டுகோள்

நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மழைக்காலம் முடிவதற்குள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த வரை மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளில் குறைந்தபட்சம் சிறு நிறுவனங்கள் தலா 5 மரக்கன்றுகளும், குறு நிறுவனங்கள் 50 மரக்கன்றுகளும் நட்டு அவை பராமரிக்கப்பட வேண்டும் என்று மத்திய சிறு, குறு தொழில்துறை அமைச்சர் நிதின் கட்காரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் உள்நாட்டு வகை பழக்கன்றுகள், வேப்பமரக் கன்றுகள் ஆகியவற்றை நடுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version