காரைக்குடி அருகே ஓய்வுபெற்ற தபால்துறை அதிகாரி வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளை

காரைக்குடி அருகே ஓய்வுபெற்ற தபால் துறை அதிகாரி வீட்டில் 170 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காந்திநகரில் ஓய்வுபெற்ற தபால் துறை அதிகாரி ஜெயராஜ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெயராஜ் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்தநிலையில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 170 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version