தேசிய ஜனநாயக கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும்: பிரதமர் மோடி

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் தொடங்கியதையடுத்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முந்தைய காங்கிரஸ் அரசு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களை ஏடிஎம் போன்று பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

ஏழை மக்களுக்கும், நாட்டு பாதுகாப்புக்கும் தான் செய்துள்ள நலத் திட்டங்கள் மக்களுக்கு தெரியும் என்றும், 2014ம் ஆண்டை விட வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், இந்த தேர்தலில் போட்டியே இல்லை என்றும், 300 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version