வெள்ளத்தில் தத்தளித்த மக்கள்! விபரம் அறியாமல் உளறிய திமுக அமைச்சர்!

நாமக்கல்லில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களைப் பார்வையிட வந்த விடியா திமுக அரசின் அமைச்சர் உளறிக்கொட்டியது பொதுமக்களிடையே நகைப்புக்குள்ளானது. 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் உள்ள காவிரி கரையோர வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அவதியுற்ற மக்களை வருவாய்த்துறையினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய விடியா திமுக அரசின் அமைச்சர் மதிவேந்தன், சரியான புள்ளி விவரங்களை அறியாமல் பொதுமக்கள் முன் உளறிக்கொட்டினார். செய்தியாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் எத்தனை வீடுகள் உள்ளன என கேட்ட கேள்விக்கு, தன்னிடம் தற்போது தகவல் இல்லை எனக் கூறிவிட்டு, பின்பு குத்துமதிப்பாக ஒரு எண்ணிக்கையை தெரிவித்தார்.

Exit mobile version