மர்ம பார்சலில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் படுகாயம்

வேலூர் அருகே மர்ம பார்சலில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆம்பூர் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் வசித்து வரும் விவசாயி குமரேசன் என்பவர் வனப்பகுதியில் கிடைத்த மர்மப்பார்சலை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். வீட்டில் வைத்து பார்சலை பிரித்தபோது அதிலிருந்த 2 நாட்டு குண்டுகள் வெடித்து சிதறியது. இதில் குமரேசன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மர்ம பார்சல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version