சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் நுழைவாயிலில் மர்ம பை ஒன்று டிராலியில் இருந்ததை கண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உபகரணங்களை வைத்து பரிசோதித்து பார்த்ததில் அந்த பையில் அச்சம் படும் அளவிற்கு எதுவும் இல்லை என கண்டறியப்பட்டது. இச்சம்பவத்தால் சென்னை விமான நிலைய நுழைவாயில் இரண்டாம் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Exit mobile version