முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி வெட்டிக்கொலை!

மதுரை எல்லிஸ்நகர், போடி லயன் பழைய காலனி பகுதியில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அண்ணன், தம்பி இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சகோரர்களான வெள்ளி கண் செந்தில், முருகன் ஆகிய இருவரும் தத்தனேரி பகுதியில் உள்ள அவர்களது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, 10 பேர் கொண்ட கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டி கடப்பாரை மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொன்று விட்டு தப்பி சென்றுள்ளனர். காவல்துறை விசாரணையில் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version