பெற்ற மகனையே ஏரியில் தள்ளி கொலை செய்த தாய்!!!

ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை, பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பாட்ரிகா ரிப்ளே, தன் கணவர் அல்டோ ரிப்ளே மற்றும் 9 வயது மகன் அலஜான்றோ ரிப்ளேவுடன் வசித்துவந்தார். ஆட்டிசம் குறைபாடுடைய அச்சிறுவனை ஏரியில் தள்ளி பாட்ரிகா திட்டமிட்டு கொலை செய்தது உறுதியானதால், அவருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது. முதல்முறை ஏரியில் தள்ளியபோது பார்த்த அக்கம்பக்கத்தினர் சிறுவனைக் காப்பாற்றியுள்ளனர். ஆனால் மீண்டும் வேறு ஏரிக்கு அழைத்துச் சென்று அதில் தள்ளிவிட்டு, பாட்ரிகா தப்பித்துக்கொள்வது அங்குள்ளா காமிராவில் பதிவாகியுள்ளது. அதனால் ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சிறுவனைக் கொலை செய்தது அவனது தாய்தான் என்பது உறுதியானதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மனைவியின் செயல் மிகவும் வேதனையளிப்பதாக சிறுவனின் தந்தை அல்டோ ரிப்ளே தெரிவித்துள்ளார்.

Exit mobile version