தொழிலதிபர் வீட்டிலிருந்த பணம், நகை கொள்ளை

ஜோலார்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் மர்ம நபர்கள் 62 சவரன் தங்கம், 15 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முதலியார் தெருவை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன். தொழிலதிபாரான இவர் சில தினங்களுக்கு முன்பு மைசூருவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்தநிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய், 62 சவரன் தங்கம் மற்றும் 15 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தடவியல் நிபுணர்களுடன் போலீசார் ஆய்வு நடத்தினர்.

Exit mobile version