விழுப்புரத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்கள் கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் லெனின் என்பவர் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி வீட்டுக்கு சென்றவர், காலை கடைக்கு வந்து பார்த்த போது, பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 40 ஸ்மார்ட்போன்கள், 10 கீபோர்டு போன்கள், 10 பவர் பேங்க்கள் மற்றும் கல்லாவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version