விடுமுறையின்போது மாணவர்களுக்குத் தொழிற் பயிற்சி: செங்கோட்டையன்

பள்ளிக் கல்விதுறை சார்பில் பல்வேறு மாற்றங்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் இருப்பது போன்று, நம் மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு, விடுமுறைக் காலங்களில் அருகில் உள்ள தொழிற்சாலையில் சென்று பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

Exit mobile version