முதியோருக்கு உதவித்தொகை வழங்குவதில் உள்ள நிபந்தனைகள் தளர்வு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதியோருக்கு உதவித்தொகை வழங்குவதில் உள்ள நிபந்தனைகள் தளர்க்கப்பட்டுள்ளதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதியோருக்கு உதவித்தொகை வழங்குவதில் உள்ள நிபந்தனைகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version