முதல்வருக்கு நன்றி தெரிவிக்காத ஸ்டாலினை மக்கள் ஏற்கமாட்டார்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்காத மு.க.ஸ்டாலினை மக்கள் ஏற்க தயாராக இல்லை  என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். தமிழகத்திற்கு நல்லாட்சி விருது பெற்று தந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று பெருமிதம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, சிறுபான்மை மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி மு.க. ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார்.

Exit mobile version