விபத்தில் சிக்கிய 5 வயது குழந்தையை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் அருகே விபத்தில் சிக்கிய குழந்தையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தோளில் தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்

விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் செய்து வருகிறார். திருச்சுழி அருகே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்ற போது இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்தில் சிக்கியதை கண்டார். இந்த விபத்தில் பாலமுருகன் என்பவர் தனது 5 வயது குழந்தை செல்வராணியுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனடியாக அந்தக் குழந்தையை தனது தோளில் தூக்கிக்கொண்டார். பின்னர் தனது காரில் குழந்தை செல்வராணியை திருச்சுழி அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். குழந்தை விபத்தில் சிக்கியதும் விரைந்து செயல்பட்டு தனது காரிலேயே ஏற்றிச்சென்ற அமைச்சரின் மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டினர்.

Exit mobile version