கோலத்தை வைத்து போராட்டம் நடத்துவது தவறான போக்கு: அமைச்சர் பாண்டியராஜன்

கோலம் என்பது மங்கலத்தின் அடையாளம் என்றும், அதை வைத்து திமுகவினர் போராட்டம் நடத்துவது தவறான போக்கு என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் எனக் கூறினார். குடியுரிமைச் சட்டத்தால், இந்திய குடிமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றுக் கூறிய அவர், திமுகவின் போக்கை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version