தமிழக கோயில்களை மத்திய தொல்லியல் துறை கேட்கவில்லை: அமைச்சர் பாண்டியராஜன்

தமிழக கோயில்களை மத்திய அரசு கேட்கவில்லையென தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் கோயில் மற்றும் புராதன சின்னங்கள் பற்றி எந்த புரிதலும் இல்லாமல் அறிக்கை விடுவதாக தெரிவித்தார். காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடைபெறாதவைகளை ஸ்டாலின் கூறுவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொன்மை வாய்ந்த கோயில்களை மத்திய தொல்லியத்துறை பராமரிப்புக்கு வழங்கிட எந்த தேவையும் ஏற்படவில்லையென இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version