கீழடி அகழாய்வில் முதல் இரண்டு கட்ட முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர்

கீழடி அகழாய்வில் முதல் இரண்டு கட்ட முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் தனியார் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து கொத்தடிமைகளாக பணியாற்றிய 1,200 பேரை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 70 இடங்களில் தமிழக அரசும், 120 இடங்களில் மத்திய அரசு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். கீழடி 6 ஆம் கட்டம் அகழாய்வு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version