தமிழ் பாடப்பிரிவில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: அமைச்சர்

தமிழ் பாடப்பிரிவில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ் அகராதியியல் நாள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் 9 ஆயிரம் புதிய தமிழ்ச் சொற்கள் அடங்கிய குறுந்தகட்டைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், தமிழில் பயின்றவர்களுக்கு அனைத்து துறையிலும் 20 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், தமிழுக்குப் பொற்கால ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளதாகக் கூறினார்.

Exit mobile version