பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அரங்கத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சீரணி அரங்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

பசுபதிபாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 6 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சீரணி அரங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அரங்கத்தை திறந்து வைத்தார். அதன் பின் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மாணவர்களுடன் புகைப்படும் எடுத்துக்கொண்டார். அதனை தொடர்ந்து காந்திகிராமத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கொடையினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

Exit mobile version