இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கைப்பந்து விளையாடியதை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.  

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ. எஸ்.மணியன் மீனவ கிராமங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது அங்குக் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து தானும் உற்சாகத்துடன் விளையாடினார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கைப்பந்து விளையாடியதை ஆர்வத்துடன் கண்டு ரசித்த அப்பகுதி மக்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் அமைச்சரைப் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version