மேகதாது அணை விவகாரம்: தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வரும் 6-ம் தேதி கூடுகிறது

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வரும் 6-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

காவிரியில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்படும் என தெரிகிறது. மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்ய கர்நாடகாவிற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் நடவடிக்கைகளுக்கு துணை போகக் கூடாது என, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் வரும் 7-ம் தேதி அணை கட்டுவது தொடர்பாக சிறப்பு நிபுணர் குழுவின் ஆய்வு நடைபெறும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் 6-ந் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் காவிரியில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Exit mobile version