மருத்துவ மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்ற வேண்டும்

சென்னை தரமணியில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தென்கிழக்கு ஆசியாவிலேயே புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் முதல் ப்ரோட்டான் தெரபி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போலோ மருத்துவமனை விழாவில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டு உணவு வகைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை எனப் பாராட்டு தெரிவித்தார். மேலும், மருத்துவ மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்ற வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version