"வாக்கு விற்பனைக்கு இல்லை" என வீடுதோறும் பேனர் வைத்த மருதிப்பட்டி கிராம மக்கள்

சிவகங்கை மாவட்டத்தில் ”இந்த வீட்டில் கண்டிப்பாக வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற பேனரை வீடு தோறும் வைத்துள்ள மருதிபட்டி கிராம மக்கள் மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிபட்டியில் வாக்கிற்குப் பணம் பெறுவது குற்றம் என்றும் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அப்பகுதி மக்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு பல்வேறு தரப்பினரையும் ஈர்த்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “இந்த வீட்டில் கண்டிப்பாக வாக்கு விற்பனை இல்லை” என்ற வாசகம் அடங்கிய பேனரை வீடு தோறும்  கட்டியுள்ளனர். இந்த பேனர்களை வீடுகளில் கட்டித் தொங்க விட்டுள்ள அப்பகுதி மக்களின் இந்தச் செயல் மற்ற ஊராட்சிகளுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

Exit mobile version