கோவிலில் செல்போன்களை திருடும் டிப்டாப் ஆசாமி

சென்னையை அடுத்த திருநீர்மலையில் உள்ள லட்சுமி விநாயகர் கோவிலில் செல்போன்களை திருடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாமி தரிசனம் செய்தார். அவர் கோவிலை விட்டு சென்ற பிறகு கோவில் அலுவலக அறையிலிருந்த விலையுயர்ந்த கைப்பேசிகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த நபர் சாமி தரிசனம் செய்த பிறகு அலுவலகத்திற்குள் நுழைந்து கண் இமைக்கும் நேரத்தில் நுழைந்து பொருட்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. அந்த நபர் பல கோவில்களில் இதேபோன்று கைவரிசை காட்டி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version