குடியாத்தம் அருகே ஓடும் ரயிலில் 150 கிராம் தங்க நகை திருடிய வாலிபர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓடும் ரயிலில் பயணிகளிடம் தங்க நகை திருடிய வாலிபரை பிடிக்க ரயில்வே காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த வாலிபரை தனிப்படையினர் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை செய்ததில் குடியாத்தம் அருகே வேப்பூர் ஊராட்சி முல்லை நகர் காலனி பகுதியைச் சேர்ந்த 38 வயதான வசந்தகுமார் என்பது தெரியவந்தது.

இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை நோக்கி செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆந்திர மாநிலம் சேர்ந்த நாகேஸ்வரராவ் மனைவி மாதவி என்பவரிடம் 28 கிராம் தங்க தாலி சரடு திருடியதையும் அதே ரயிலில் அதே நாளில் தெலுங்கானா மாநிலத்தை லட்சுமியிடம் 30 கிராம் தங்க செயினை திருடியதையும் ஒப்புக்கொண்டார். மேலும் பிந்து என்பவரிடம் 45 கிராம் தங்க நகை மற்றும் ரொக்க பணம் ரூபாய் 8 ஆயிரம் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து ஜோலார்பேட்டை கவால்துறையினர் அவனிடம் இருந்து 5 பயணிகளிடமும் 5 வழக்குகளிலும் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டதின் பேரில் 92 கிராம் நகையை பறிமுதல் செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version