மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே மனநலம் பாதித்த பெண்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியை சார்ந்தவர் மதுரைவீரன். இவரது தங்கையின் பெயர் தனலட்சுமி வயது 36. இவர் வாய் பேச இயலாத, மனநலம் குன்றியவர். இவரது தாய் தந்தை இறந்துவிட்ட நிலையில், இவரது அண்ணனின் இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று காலை அருகில் உள்ள வயல்வெளி பகுதிக்கு சென்றார்.

இதனை கவனித்த இப்பகுதியை சார்ந்த முனியாண்டி என்ற கொடூரன், தனலட்சுமியை முட்புதருக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துளான். உடனே தனலட்சுமி சத்தம் போடவே…வயல்வெளி வழியாக சென்ற நபர்கள் முனியாண்டியிடம் இருந்து தனலட்சுமியை மீட்க முயற்சித்தனர்,பொதுமக்கள் கூடியதை கண்டு அதிர்ச்சியடைந்த முனியாண்டி அங்கிருந்து  தப்பியோட முயற்சிதான் இருப்பினும் முனியாண்டியை  மடக்கிப்பிடித்த மக்கள் அவனை அடித்து துவைத்தனர். இதனையடுத்து இராஐபாளையம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் முனியாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version