செஞ்சி அருகே ATM -ல் பணம் எடுத்துதருவதாக ஏமாற்றிய இளைஞர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பவர்களை ஏமாற்றி, கொள்ளையடித்த இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களிடம், அவர்களுக்கு உதவி செய்வது போல் உதவி செய்து அவர்களின் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து வந்தனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததையடுத்து, செஞ்சி டிஎஸ்பி நீதிராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில்,  அவலூர்பேட்டையில் உள்ள ஸ்டேட்  வங்கி ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து ஒருவரைப் பிடித்து விசாரித்ததில் பலரை ஏமாற்றி 5 லட்சம் ரூபாய் வரை கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து அவலூர் பேட்டை போலீசார் 2 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். 

Exit mobile version