மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த வழக்கில் சிறுவன் கைது

விழுப்புரம் ரயில்வே குடியிருப்பில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் 2வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள தெற்கு ரயில்வே குடியிருப்பு பகுதியில், கடந்த மாதம் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து விழுப்புரம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனபது தெரியவந்தது.

இதுதொர்பாக, தனிப்படை அமைத்து, கொலையாளியை காவல்துறையினர் தேடிவந்தனர். சந்தேகத்தின்பேரில், வி.மருதுர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தியதில், அந்தப் பெண்ணை மிரட்டி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன், கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டான். இதையடுத்து, சிறுவனை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

Exit mobile version