சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி 8 மணி நேரத்தில் கைது

சென்னையில் இரண்டரை சவரன் தங்க செயினை பறித்த குற்றவாளியை, சம்பவம் நடந்த 8 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் கண்கானிப்பாளர் நந்தகுமாரின் மனைவி சரளாவிடம் இருந்து இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த இரயில்வே போலீசார் சிசிடிவி காட்சி உதவியுடன் 8 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் திருட்டில் ஈடுபட்டவர் கொல்கத்தாவை சேர்ந்த ராகேஸ் மண்டல் என்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version