அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதரை, கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமானோர் இன்னும் தரிசிக்க முடியவில்லை எனவும், 48 நாட்களுக்கு பின் அத்திவரதரை குளத்தில் வைக்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்பதால், தரிசன காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டுமென கோரி, உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில் மரபு மற்றும் வழிபாட்டு நடைமுறைகளில் தலையிட முடியாது எனக் கூறி, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்தனர்.

Exit mobile version