அத்திவரதர் தரிசனம்: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு

அத்திவரதர் வைபவத்திற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு, டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் வைபவ விழா அமைதியாக நடைபெறும் வகையிலும், பக்தர்களுக்கு உதவிடும் வகையிலும் காவல் துறையினர் மிகச் சிறப்பான பணியை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார். குறைந்தபட்ச வசதிகளை கொண்டு சளைக்காமல் காவல்துறையினர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளதாக தெரிவித்துள்ள டிஜிபி திரிபாதி, மக்கள் காவல்துறையின் மீது வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாளை வரை, பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் தொடரந்து சிறப்பான பங்களிப்பினை வழங்கிட வேண்டும் என்று அவர் வாழ்த்தி உள்ளார்.

Exit mobile version